Monday, June 9, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெல்லவாய வாகன விபத்து - பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் பலி

வெல்லவாய வாகன விபத்து – பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் பலி

வெல்லவாய – தனமல்வில வீதியில், யாலபோ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், பொலிஸ் அலுவலர் ஒருவர் உட்பட, அவரின் குடும்பத்தைச் சேர்ந்த மேலும் இருவர் உயிரிழந்தனர்.

நேற்றிரவு வெல்லவாய பகுதியில் இருந்து, தனமல்வில நோக்கிப் பயணித்த கெப்ரக வாகனம் ஒன்று, எதிர்த்திசையில் பயணித்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது, குறித்த முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்றஇ அதன் சாரதியான பொலிஸ் அலுவலரும், பின் இருக்கையில் பயணித்த அவரது மனைவி மற்றும் தந்தை ஆகிய மூவரும் மரணித்தனர்.

42 வயதான குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், தனமல்வில பொலிஸ் நிலையத்தில் பணியாற்றியுள்ளார்.

அவரின், மனைவியும், தந்தையும், முறையே 42 மற்றும் 70 வயதானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில், குறித்த பொலிஸ் அலுவலரின் 11 வயதான மகன், காயமடைந்த நிலையில், மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில், கெப் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மதுபோதையில் வாகனம் செலுத்தியிருந்ததுடன், செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாதவர் என விசாரணையில் தெரியவந்துளளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles