யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக அண்டை நாடான போலந்துக்கு சென்றுள்ளார்.
ரஷ்யாவுடனான போர் தொடங்கிய பின்னர், ஒரு மில்லியனுக்கும் அதிகமான யுக்ரேனிய அகதிகள் போலந்தில் தஞ்சம் புகுந்தனர்.
ரஷ்யாவினால் அபகரிக்கப்பட்ட காணிகளை மீளப் பெறுவதற்கு எதிர்த்தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்ட நிலையில் யுக்ரைன் ஜனாதிபதியின் விஜயம் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.