புலம்பெயர் தொழிலாளர்கள் 60 பேர் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் அரசாங்கத்திற்கு 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரியாக கிடைத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பணம் அனுப்பும் தொழிலாளர்கள் மட்டுமே மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும்.
அந்த வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு தனிப்பட்ட முறையில் டொலர்களை கொண்டு வரும் ஏனைய நபர்களுக்கு மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்கும் முறைமையும் தயாரிக்கப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.