தலங்கம கிம்புலா எல பிரதேசத்தின் தியவன்னா ஓயாவில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் இன்று மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபருக்கு சுமார் 45 வயது இருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாடாளுமன்ற பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் ரகாரம் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் இளஞ்சிவப்பு நிற சட்டையும், கறுப்பு நிற நீண்ட கால்சட்டையும் அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீன்பிடிக்கச் சென்று தவறி விழுந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற பல கோணங்களில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.