வவுனியா – வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயப் பகுதியை ‘வடுநங்கல’ பகுதி எனவும், அங்கு சிவன் ஆலயம் உள்ளதென கூறப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
இந்த சிவன் கோயிலை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், சிவனின் சாபத்திற்கு ஆளாகவேண்டும் என சபையில் உரையாற்றிய சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறினார்கள்.
ஆனால், புராதன பௌத்த தொல்பொருள் சின்னங்களை சிதைத்து, சட்டத்திற்கு முரணாக சிவன் கோயிலை அமைக்கும் தரப்பினருக்கு எதிராக சிவனின் சாபம் திரும்புமே தவிர, ஏனைய தரப்பினருக்கு அல்ல என தாம் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.