ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நியூயோர்க் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் போட்டியிட்ட போது, அவருடன் இருந்த ரகசிய உறவு குறித்து ஸ்டோர்மி டேனியல்ஸ் பரபரப்பு தகவலை வெளியிட்டார்.
ஆனால்இ இந்த குற்றச்சாட்டை ட்ரம்ப் திட்டவட்டமாக மறுத்தார்.
தேர்தல் பிரசார சமயத்தில் ஆபாச நடிகை வெளியிட்ட தகவலால் டிரம்புக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது.
இதையடுத்து இவ்விவகாரம் தொடர்பில் ஆபாச நடிகை பேசாமல் இருப்பதற்காக அவருக்கு 1.07 கோடி ரூபாவை ட்ரம்ப் வழங்கியுள்ளார்.
ஆனால் குறித்த பணம் ட்ரம்பின் தேர்தல் வரவு, செலவு கணக்கில் சட்ட ரீதியிலான செலவு என காட்டப்பட்டது.
அமெரிக்காவை பொறுத்தவரை அமெரிக்காவில் பொய்யாக வணிக செலவை காட்டுவது சட்ட விரோதமாகும்.
எனவே இது தொடர்பில் விசாரணை நடந்து வந்த நிலையில் அண்மையில் தேர்தல் பிரசார வணிக சட்டத்தின் கீழ் கிரிமினல் குற்றச்சாட்டு அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டது.
இதனால் டிரம்ப் கைது செய்யப்படுவார் என்று தகவல் வெளியானது.
இந்த வழக்கு அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் நேற்று (04) முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனதை தொடர்ந்து அவர் நியூயார்க் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டார்.