யாழ்ப்பாணம் – நாகர்கோவில் மற்றும் குடாரப்பு பகுதியில் சட்டவிரோத கடலட்டை தொழிலில் ஈடுபட்ட 17 மீனவர்கள் கைதாகினர்.
கைதானவர்களிடமிருந்து 6 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடற்படையினர் நேற்று மேற்கொண்ட தேடுதலின் போது, குறித்த மீனவர்கள் கைதாகினர்.
இதன்படி, நாகர்கோவில் கடற்பகுதியில் சட்டவிரோத கடலட்டை தொழிலில் ஈடுபட்ட 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களிடம் இருந்து ஆயிரத்து 305 கடலட்டைகளும், 4 படகுகளும் கைப்பற்றப்பட்டன.
இதுதவிர, குடாரப்பு கடற்பகுதியில் அனுமதிபத்திரம் இன்றி கடலட்டை தொழிலில் ஈடுபட்ட 5 மீனவர்கள் கைதாகினர்.
கைதானவர்களிடம் இருந்து ஆயிரத்து 700 கடலட்டைகளும், இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.