நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் மீது இராணுவத்தினர் சென்ற பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இதன் போது குறித்த மோட்டார் சைக்கிளுக்கு அருகில் நின்றிருந்த யுவதி ஒருவர் உயிரிழந்ததாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டான பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயது யுவதியே இவ்வாறு உயிரிழந்தார்.
உயிரிழந்த யுவதி தனது காதலனுடன் சுற்றுலா பயணமொன்றை முன்னெடுத்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.