சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சுபநேர அட்டை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் பாரம்பரிய முறைப்படி இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
பாரம்பரிய முறைப்படி மேளதாளத்துடன் கொண்டு வரப்பட்ட சுபநேர அட்டையை புத்தசாசன சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஜனாதிபதிக்கு வழங்கி வைத்தார்.
பழைய ஆண்டிற்கான நீராடல், புத்தாண்டு நேரம் , தான நேரம், சமைத்தல், வேலை செய்தல், மற்றும் உண்ணுதல், தலைக்கு எண்ணெய் பூசுதல், பாதுகாப்புக்காக வெளியே செல்வது, மரம் நடுதல் போன்றவை சுப நேரங்களாகும்.
கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் புத்த சாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.