பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று தமிழ் அரசியல் கைதிகள் அண்மையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மதிராசன் சுலக்சன், இராசதுரை திருவருள், கணேசன் தர்சன் ஆகிய மூவரே இவ்வாறு விடுதலையாகியுள்ளனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 2009ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட மூவரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், மகசின் சிறையில் மூவரும் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இவர்கள் தொடர்பான வழக்கு வவுனியா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், மூவரையும் நிரபராதிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்து விடுதலை செய்தது.