அளுத்கம மற்றும் மொரகல்ல பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட 37 சீன பிரஜைகள் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 5 சீன பெண்களும், 6 வயது குழந்தையும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த போதே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.