எரிபொருள் விலை குறைப்பின் நன்மைகளை நுகர்வோருக்கு வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொருட்கள் மற்றும் சேவை வழங்குபவர்களிடம் நிதியமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
எரிபொருள் விலை குறைப்பின் பலனை நுகர்வோருக்கு வழங்க பல நிறுவனங்கள் முன்வரவில்லை என தெரிவித்து நிதி அமைச்சுக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், எரிபொருள் விலையை குறைப்பதில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.
இதேவேளை, எரிபொருளின் விலை குறைப்புடன் ஒப்பிடும் போது, அரிசியின் விலையையும் ஓரளவு குறைக்க முடியும் என நுகர்வோர் சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.