திருத்தப்பட்ட பேருந்துக் கட்டணப் பட்டியலைக் காட்சிப்படுத்தாமல் அதிகக் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளைச் சோதனையிடும் நடவடிக்கை இன்று (3) முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக மேல்மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பிரசன்ன சஞ்சீவ தெரிவித்தார்.
அதன்படி, திருத்தப்பட்ட பேருந்துக் கட்டணப் பட்டியலை அனைத்துப் பயணிகளும் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்துவது கட்டாயம் எனவும், அங்கீகரிக்கப்பட்ட பேருந்துக் கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கும் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.