Thursday, January 15, 2026
27.2 C
Colombo
செய்திகள்வணிகம்மட்டக்குளியில் ஒருவர் கொலை

மட்டக்குளியில் ஒருவர் கொலை

மட்டக்குளி-களனி கங்கை மோல வீதியில் முச்சக்கரவண்டியில் வந்த இனந்தெரியாத சிலர் நபரொருவரை கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய மொஹமட் சுதுர் மொஹமட் இர்பாட் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரை அவரது வீட்டின் முன் வைத்து தாக்கிவிட்டு சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதில் பலத்த காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவர்களுக்குள் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை கைது செய்ய விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மட்டக்குளி பொலிஸ் நிலைய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles