Thursday, May 29, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசாரா ஜாஸ்மின் உயிரிழந்தாக கூறப்படும் அறிக்கையை பரிசீலிக்க வேண்டும்

சாரா ஜாஸ்மின் உயிரிழந்தாக கூறப்படும் அறிக்கையை பரிசீலிக்க வேண்டும்

ஈஸ்டர் தாக்குதலின் முக்கிய சாட்சிகளில் ஒருவரான சாரா ஜாஸ்மின் தொடர்பில் இதற்கு முன்னர் இரண்டு முறை நடத்தப்பட்ட சோதனைகளின் முடிவுகளை நிராகரித்து, மூன்றாவது டிஎன்ஏ அறிக்கையை வெளியிடுவது குறித்து ஆழமாக கேள்வி எழுப்பப்பட வேண்டும் என சமூக ஆர்வலர் ஷெஹான் மலேகா தெரிவித்துள்ளார்.

அதே அதிகாரிகள் குழுவின் மேற்பார்வையில் இருந்த சாரா ஜாஸ்மின் பற்றிய டிஎன்ஏ அறிக்கைகள் பின்னர் எப்படி மாறியது என்பதை கண்டறிய வேண்டியது அவசியம் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

‘சாராவின் டிஎன்ஏ பரிசோதனையை நடத்திய ஏஎஸ்பி சமன் வீரசிங்கவின் மர்ம மரணம் நினைவிருக்கிறதா?’ என்று முகநூலில் பதிவிட்டு அவர் வினவியுள்ளார்.

முந்தைய இரண்டு சோதனைகளின் முடிவுகளை நிராகரித்து மூன்றாவது டிஎன்ஏ அறிக்கையை மட்டும் ஏன் ஏற்க வேண்டும் என்று மறுபரிசீலனை செய்தால் இதற்கான மூல காரணத்தை எளிதாகக் கண்டறிய முடியும் என்று இந்த சமூக ஆர்வலர் கேள்வி எழுப்பியுள்ளார்.

டிஎன்ஏ மாதிரிகள் இதற்கு முன்பு இரண்டு முறை பரிசோதிக்கப்பட்டன.

அப்படியானால் நாம் கேட்க வேண்டிய கேள்வி முதல் மற்றும் இரண்டாவது சோதனைகளை யார் செய்தார்கள்? ஏன் இந்த மூன்றாவது அறிக்கையை ஏற்க வேண்டும்? அதே அதிகாரிகள் முதல் மற்றும் இரண்டாவது செய்திருந்தால், முதல் இரு அறிக்கைகளை விட்டு மூன்றாவது அறிக்கையை மட்டும் ஏன் அவர்கள் ஏற்க வேண்டும்? என்று அவர் வினவினார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் பலஸ்தீன மகேந்திரன் என்ற ‘சாரா ஜாஸ்மின்’ உயிருடன் இருப்பதாக இரண்டு சாட்சிகள் சாட்சியமளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருது தாக்குதலின் பின்னர் சுயநினைவு திரும்பியபோது சாராவை பார்த்ததாக சஹ்ரானின் மனைவி ஹாதியா ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னாள் நிலைய அதிகாரி அர்ஜுன் மஹில்கந்த, ஏப்ரல் 26 ஆம் திகதிக்கு பின்னர் சாரா ஜாஸ்மின் உயிருடன் இருந்ததை தனிப்பட்ட உளவாளி மூலம் கண்டுபிடித்துள்ளார்.

சாராவை இந்தியாவுக்கு தப்பிச் செல்ல உதவியமைக்காக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர் அண்மையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles