கடந்த 29ஆம் திகதி கொஸ்கம மூனுமலை தோட்டப் பகுதியில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்தனர்.
கலுஅகல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக சந்தேகநபர்கள் இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஹங்வெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.