ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் பணிப்பாளரான பேராசிரியர் சந்திம ஜீவந்தர, உலகின் சிறந்த ஆறு இளம் விஞ்ஞானிகளில் (நோய் எதிர்ப்பு நிபுணர்கள்) இடம்பிடித்துள்ளார்.
இந்த ஆறு இளம் விஞ்ஞானிகளில் ஐவர் பிரித்தானிய பிரஜைகள் என்பதுடன் அவர்களில் இலங்கை விஞ்ஞானி ஒருவர் தெரிவு செய்யப்பட்டமை விசேட அம்சமாகும்.
சந்திமா ஜிவந்தர, பிரித்தானிய நோயெதிர்ப்பு நிபுணர்கள் சங்கத்தினால், உலகின் ஆறு இளம் விஞ்ஞானிகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நோயெதிர்ப்பு அறிவியலின் எதிர்காலத்திற்காக அர்ப்பணித்த விஞ்ஞானிகளை அங்கீகரிப்பதற்காக நடைபெறும் நோயெதிர்ப்பு விருது வழங்கும் விழாவில் அவர் அதற்கான விருதை பெறுவார்.
இம்யூனாலஜி விருதுகள் என்பது உலகப் புகழ்பெற்ற மருத்துவ விருது வழங்கும் விழாவாகும். மேலும் உலகம் முழுவதிலுமிருந்து 32 விஞ்ஞானிகள் விருதுகளைப் பெற ஆறு பிரிவுகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
விருது வழங்கும் விழா லண்டனில் ஏப்ரல் 20ஆம் திகதி நடைபெறவுள்ளது.
பேராசிரியர் சந்திம ஜீவந்தர, இலங்கையில் கொவிட்-19 வைரஸ் பரவுவது தொடர்பாக பல முன்னோடி விசாரணைகளை நடத்தி, இது தொடர்பாக பல புதிய தகவல்களை வெளிக்கொணர்ந்த விஞ்ஞானி ஆவார்.