மேல் சப்ரகமுவ, மற்றும் வட மேல் மாகாணங்களிலும் அநுராதபுரம், கண்டி நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மாலை வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.