நாடு அபிவிருத்தியடைய வேண்டுமானால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று அதனை பிரச்சினையில் இருந்து பிரிக்க முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகத்தினால் நடாத்தப்பட்ட “சர்வதேச நாணய நிதியம் மற்றும் அதற்கு அப்பால்” என்ற தொனிப்பொருளிலான உரையாடலில் பிரதான உரையை ஆற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பசுமைப் பொருளாதாரத்திற்கான இலங்கையின் சாத்தியக்கூறுகள் நன்றாக இருப்பதாகவும், இலங்கை உடனடியாக அதில் இறங்கி அதனை ஆரம்பிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
நாட்டின் வளங்களை அதிகமாக வீணடித்த பெற்றோலியக் கூட்டுத்தாபனம், ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் அல்லது மின்சார சபைக்கு ஆதரவளிக்கவன்றி, வரியவர்கள் மற்றும் நலிவடைந்தவர்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கே பணம் தேவைப்படுவதாகவும், ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.