அஹங்கம – மிதிகம பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றின் முன்பாக நேற்று (29) பிற்பகல் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அதன் உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த நிலையில் மாத்தறை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று (30) அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மிதிகம பிரதேசத்தில் உணவகம் ஒன்றை நடத்திவந்த சிந்து சந்தருவன் தொடம்கொடகே என்ற 31 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை 6.15 அளவில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், காரில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் ரீ56 ரக துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளனர்.
2021 ஆம் ஆண்டில், இந்த உணவக உரிமையாளரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போதிலும் அதில் அவரது சகோதரர் கொல்லப்பட்டார்.
இதேவேளை, பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ஹரக்கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்னவின் உதவியாளர்களால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.