பேருவளை நகரில் இருந்து 24 கிலோமீற்றர் அப்பால் உள்ள கடற்பிரதேசத்தில் நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது.
இன்று மதியம் ஒரு மணி அளவில், 3.7 மெக்னிடியுட் அளவில் இந்த நில அதிர்வு பதிவானதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
இதனால் ஏதேனும் பாதிப்புகள் உண்டா? என்ற விபரம் இன்னும் வெளியாகவில்லை.