இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட முட்டையின் முதலாவது கையிருப்பு இன்று (30) சந்தைக்கு வெளியிடப்பட்டது.
இலங்கையில் உள்ள பேக்கரி உற்பத்தியாளர்களிடையே இந்த முட்டைப் பங்கு விநியோகிக்கப்பட்டது.
பேக்கரி உரிமையாளர்களுக்கு தலா 35 ரூபா என்ற விலையில் 10 இலட்சம் முட்டைகள் வழங்கப்பட்டதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன குறிப்பிட்டார்.
பேக்கரி உரிமையாளர்களுக்கு விற்கப்பட்ட இந்த முட்டைகளின் உற்பத்தி திகதி 2023 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் திகதி என்பதுடன், காலாவதி திகதி 2023 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் திகதி என தெரிவிக்கப்படுகிறது.