புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பும் பணத்திற்கு ஏற்ப மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தனியார் அடிப்படையில் இலங்கைக்கு டொலர்களை கொண்டு வரும் ஏனைய நபர்களுக்கு மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான பொறிமுறையொன்று தயாரிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.