Monday, July 21, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேசபந்து தென்னகோனுக்கு எதிரான ரிட் மனு நிராகரிப்பு

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான ரிட் மனு நிராகரிப்பு

காலிமுகத்திடலில் “கோட்டாகேகம” போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவித்து மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்து வாக்குமூலம் பதிவு செய்ய சட்டமா அதிபருக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதியரசர் நிஷ்ஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் ஏ.மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles