Monday, June 29, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுழிக்குள் தவறி வீழ்ந்த தொழிலாளர்கள் – மீட்பு பணிகள் தீவிரம்

குழிக்குள் தவறி வீழ்ந்த தொழிலாளர்கள் – மீட்பு பணிகள் தீவிரம்

கொட்டாஞ்சேனை, ஹெட்டியாவத்தை பகுதியில் கழிவுக் குழாயின் திருத்த பணிக்காக திறக்கப்பட்டிருந்த ஆழமான குழியுக்குள் மூன்று தொழிலாளர்கள் தவறி வீழ்ந்துள்ளனர்.

இவ்வாறு தவறி வீழ்ந்த மூவரில் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

ஏனைய இருவரையும் மீட்கும் நடவடிக்கைகளை பொலிஸாரின் உதவியுடன் தீயணைப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

நீர் வடிகாலமைப்புச் சபையின் பராமறிப்பு பணிகள் காரணமாகவே கழிவுக் குழி திறந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும் குழியுக்குள் நீர் நிரம்பியுள்ளமையினால், மீட்பு பணிகளை சிரமத்துடன் தீயணைப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles