Friday, September 12, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஈஸ்டர் தாக்குதல் தொடர்பான பேராயரின் மனுவை பரிசீலிக்க திகதி அறிவிப்பு

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான பேராயரின் மனுவை பரிசீலிக்க திகதி அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த சட்டமா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.

சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதனையடுத்து, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நாவன மற்றும் மனுதாரரின் சட்டத்தரணிகள் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், உண்மைகளை உறுதிப்படுத்துவதற்கு குறித்த மனுவை மே மாதம் 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு உத்தரவிட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles