Wednesday, July 23, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇழப்பீடை வழங்க நிதி சேகரித்துக் கொண்டிருக்கிறேன்- மைத்ரிபால சிறிசேன

இழப்பீடை வழங்க நிதி சேகரித்துக் கொண்டிருக்கிறேன்- மைத்ரிபால சிறிசேன

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்க வேண்டிய 10 கோடி ரூபா நட்டஈட்டை வழங்குவதற்காக தற்போது நிதி சேகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

காலி – பத்தேகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

உரிய நட்டஈடு தொகையை வழங்க இன்னும் 3 மாதங்களே உள்ளதாக அவர் கூறினார்.

2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தொடர் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதற்காக பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 கோடி ரூபா இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles