அரசாங்கத்தினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள மத்திய வங்கி திருத்த சட்டமூலத்துக்கு எதிரான மனு இன்று உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த சட்டமூலம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நீதிமன்றுக்கு சென்றுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பிரியந்த ஜயவர்தன, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.