ஊவா பரணகம, மஸ்பன்ன வெலேகடே பிரதேசத்தில் வீடொன்றின் கட்டில் ஒன்றில் பொறுத்தப்பட்டிருந்த வேலியில் சிக்கி ஏழு மாத குழந்தை உயிரிழந்துள்ளது.
குழந்தையின் தாய் வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்த வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஊவா பரணகம பொலிஸார் தெரிவித்தனர்.
தாய் வீட்டிற்கு வந்து குழந்தையை பரிசோதித்தபோது, படுக்கையின் வேலியில் குழந்தையின் உடல் சிக்கியிருந்ததை அவதானித்துள்ளார்.
பின்னர் குழந்தையை வெவேகம வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் குழந்தையை காப்பாற்ற முடியாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.