Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஒருவரின் கையை துண்டாக்கியவர் நீதிமன்றில் சரண்

ஒருவரின் கையை துண்டாக்கியவர் நீதிமன்றில் சரண்

கூரிய ஆயுதத்தால் ஒருவரை கொடூரமாக தாக்கி அவரது கையை துண்டாக்கி அதனை எடுத்துச் சென்றிருந்த சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

சந்தேக நபர் சட்டத்தரணி ஊடாக மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் சரணடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த 21ஆம் திகதி மொரட்டுவ கொரலவெல்ல பிரதேசத்தில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறில் சந்தேக நபர் பழிவாங்கும் நோக்கில் குறித்த நபரின் கையை வெட்டியுள்ளார்.

தாக்குதலுக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவரின் கைகள் மணிக்கட்டு பகுதியில் இருந்து துண்டிக்கப்பட்டிருந்ததோடு, அதனை அவர் கொண்டுச்சென்றிருந்தார்.

இந்த தாக்குதலில் காயமடைந்தவர் அதே பகுதியை சேர்ந்த 40 வயதுடையவராவார்.

சந்தேகநபர் இதற்கு முன்னரும் ஒருவரின் கையை வெட்டியிருந்ததோடு, அவரது கையை வைத்தியர்கள் ஒன்றுசேர்த்திருந்த நிலையிலேயே, தற்போது இவ்வாறு வெட்டப்பட்ட கையை சந்தேகநபர் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles