Monday, June 16, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கொழும்பு மற்றும் அதன் புறநகரின் சில பகுதிகளுக்கு நாளைமறுதினம் சனிக்கிழமை (25) பத்து மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

குறித்த தினத்தில் காலை 11 மணிமுதல் இரவு 9 மணிவரை இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, கொழும்பு, தெஹிவளை – கல்கிசை, கோட்டே, கடுவெல மாநகர சபைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களிலும், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபைகள் மற்றும் கொட்டிகாவத்தை – முல்லேரியா, இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய நகரங்களிலும் நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles