Thursday, March 26, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுIMF நிதியை ரூபாவாக உள்நாட்டு தேவைக்கு பயன்படுத்த அனுமதியுண்டு

IMF நிதியை ரூபாவாக உள்நாட்டு தேவைக்கு பயன்படுத்த அனுமதியுண்டு

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கும், விரிவாக்கப்பட்ட நிதி வசதியூடான நிதியை, ரூபாவாக மாற்றி, உள்நாட்டு தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ப்ளும்பேர்க் ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில், அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான ஒரு மைல்கல்லாக சர்வதேச நாணய நிதிய உதவியைக் கருதலாம்.

எவ்வாறிருப்பினும், நீண்டகால பொருளாதார நிலைத்தன்மையைப் அடைவதற்கு, அனைத்து தரப்பினர்களும், அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles