ரிதியகம சபாரி பூங்காவில் உள்ள ‘மீரா’ என்ற பெண் சிங்கம் 04 குட்டிகளை ஈன்றுள்ளதாக ரிதியகம சபாரி பூங்காவின் பராமரிப்பாளரான விலங்குகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த அமரசேகர தெரிவித்துள்ளார்.
இந்த நான்கு குட்டிகளும் கடந்த 18 ஆம் திகதி பிறந்ததாகவும் அவற்றில் இரண்டு குட்டிகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் இரண்டு குட்டிகள் தாயினால் நிராகரிக்கப்பட்டதாகவும் அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.
பிரசவித்த சிங்கம் 5 வயதுடையது எனவு,இ ரிதியகம சபாரி பூங்காவில் இந்த மிருகம் பிறந்துள்ளதாகவும் பிரதிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
தாயினால் நிராகரிக்கப்பட்ட இரண்டு சிங்கக்குட்டிகளும் தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பராமரிப்பு நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு உணவளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கன்று ஈனும் போது பலவீனமான விலங்குகள் தாயால் நிராகரிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
தற்போது, ரிதியகம சஃபாரி பூங்காவில் சுமார் 20 சிங்கங்கள் உள்ளன.
அவற்றில் சுமார் பத்து சிங்கங்கள் சஃபாரி பூங்காவில் பிறந்தவையாகும்.