ரயில் நிலைய விளம்பரத் திரையில் திடீரென ஆபாச காட்சிகள் ஒளிபரப்பான சம்பவம் பீகாரில் பதிவாகியுள்ளது.
பாட்னா ரயில் நிலையத்தில் உள்ள விளம்பரத் திரையிலேயே இவ்வாறு மூன்று நிமிடங்களுக்கு ஆபாச காட்சிகள் ஒளிபரப்பாகியுள்ளன.
இது குறித்து பொதுமக்கள் ரயில்வே நிர்வாகத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து ரயில்வே பொலிஸார் தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகளை தொடர்பு கொண்டு வீடியோ காட்சியை உடனடியாக அகற்றினர்.
அதே சமயம் சம்மந்தப்பட்ட விளம்பர நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், ஒப்பந்தமும் இரத்து செய்யப்பட்டது.