யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 22ஆம் இலக்க மேல்மாடி விடுதியில் இருந்து வீசப்பட்ட சிசுவொன்று ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
நீர் குழாய் ஒன்று உடைந்த நிலையில் அதன் ஊடாக குறித்த சிசு கீழே விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
சட்டவிரோதமான முறையில் கருத்தரித்த ஒருவர் குறித்த சிசுவை பிரசவித்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சிசு மூன்று மாத வளர்ச்சிக் கொண்டது என கண்டறியப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.