பணவீக்கத்திற்கு ஏற்ப சம்பளம் மற்றும் ஓய்வூதியம் மாற்றியமைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை இன்று (22) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்கால செலவு மதிப்பீட்டை கணக்கில் கொண்டு ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் மின் கட்டணம் திருத்தப்படும். பணவீக்க விகிதத்தை 4-6 சதவீதமாகக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதீட்டு பற்றாக்குறையை ஈடுகட்ட கடன் வாங்குவதன் மூலம் வருவாயை உருவாக்க வேண்டும் என்றார்.