Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதி நாடாளுமன்றில் ஆற்றிய விசேட உரை

ஜனாதிபதி நாடாளுமன்றில் ஆற்றிய விசேட உரை

சர்வதேச நாணய நிதியத்துடனான 2.9 பில்லியன் ரூபா விரிவாக்கப்பட்ட கடன் வசதி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.

ஜனாதிபதி தனது உரையில், சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியைப் பெறுவது இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் நாட்டை மேம்படுத்துவதற்குமான ஒரு படியாகும்.

கடன் வசதிகளின் 4 ஆண்டுகளில் மொத்தமாக சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்படவுள்ளதுடன், முதல் தவணையாக 333 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், ஏனைய நாடுகள் மற்றும் ஏனைய கடன்கொடுநர்களிடமிருந்து விரைவான கடன் ஆதரவில் சுமார் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாடாளுமன்றில் ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில், சிலர் இந்த கடன் வசதியை இன்னொரு கடனாகவே கருதுவதாகவும், மேலும் சிலர் நாட்டின் மொத்த கடனை பெற்ற தொகையை கொண்டு செலுத்த முடியாது எனவும் கூறுகின்றனர்.

இந்த அறிக்கைகள் அறியாமை அல்லது அரசியல் இலாபத்துக்காக நாட்டைக் காட்டிக்கொடுக்கும் விருப்பத்தை காட்டுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்த கடன் வசதி இலங்கையின் சர்வதேச அங்கீகாரத்தை மீட்டெடுக்கும், நாடு வங்குரோத்தாகாமல் இருப்பதை உறுதிசெய்து, உள்நாட்டு வங்கிகள் சர்வதேச அங்கீகாரத்தை மீண்டும் பெற உதவும்.

இது குறைந்த வட்டியில் கடனுக்கான வாய்ப்புகளை உருவாக்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் மற்றும் வலுவான புதிய பொருளாதாரத்திற்கான அடித்தளத்தை அமைக்கும்.

பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும், சகலவிதமான அழுத்தங்களையும் தாங்கிக்கொண்டும், சம பலத்துடன் துன்பங்களை அனுபவித்தும் இந்நாட்டு மக்கள் அமைதியாகவும் பொறுமையுடனும் இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

கடன் வசதியை அடைவதில் அவர்களின் அர்ப்பணிப்பு பெரும் பலமாக இருந்தது. எனவே, இந்நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி தனது நன்றியை தெரிவித்தார்.

நாங்கள் இப்போது ஒரு புதிய பயணத்தைத் தொடங்குகிறோம். செயல்முறை முழுவதும் நாம் பல பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

நமது வெற்றிக்கான அடித்தளம் இந்தப் பாதையில்தான் இருக்கும். இவற்றில் சில சீர்திருத்தங்கள் ஏற்கனவே 2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால பாதீட்டுத் திட்டம் மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டம் மூலம் முன்மொழியப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் பல சீர்திருத்தங்களை நாங்கள் அறிமுகப்படுத்தவுள்ளோம்.

2025 ஆம் ஆண்டளவில் முதன்மைப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3% ஆகக் குறைக்கவும், 2026 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14% வருவாயை அதிகரிக்கவும் அரசாங்கம் இலக்காக நிர்ணயித்துள்ளது.

நிலையான வருமான வரி வீதம் 30% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் துறை சார்ந்த வரி விலக்கு நீக்கப்பட்டுள்ளன.

உழைக்கும்போது செலுத்தும் வரி வீதம் 12% இல் இருந்து 15% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் வரி விலக்கு வரம்பு 300 மில்லியன் ரூபாவிலிருந்து 80 மில்லியன் ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டளவில் VAT மீதான தற்போதைய வரி விலக்குகளை குறைக்கவும், எளிமைப்படுத்தப்பட்ட VAT முறையை அகற்றவும், அதன் மீளளிப்புகளை துரிதப்படுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்குள் சொத்து வரியாக தோட்ட வரி அறிமுகப்படுத்தப்படும்.

பணவீக்க விகிதத்தை 4-6% ஆக குறைக்கவும் 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அதனை ஒற்றை இலக்கத்திற்கு கொண்டு வருவதையும் அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

பாதீட்டு பற்றாக்குறையை குறைக்கவும், பணத்தை அச்சிடுவதை தவிர்க்கவும் திட்டமிட்டுள்ளோம்.

அந்நிய செலாவணி சந்தை வரம்புகள் மற்றும் வழிகாட்டுதல்கள் தளர்த்தப்பட்டு, சந்தை சக்திகள் அதன் செயல்பாடுகளை தீர்மானிக்க அனுமதிக்கப்படும்.

வெளிநாட்டு கையிருப்பை கட்டியெழுப்புவதற்காக வெளிநாட்டு நாணயத்தை கொள்வனவு செய்ய மத்திய வங்கி திட்டமிட்டுள்ளது.

நல்லாட்சி தொடர்பில், இலங்கையின் நிர்வாக கட்டமைப்பு மற்றும் ஊழல்களை மதிப்பிடுவதற்கு சர்வதேச நாணய நிதியம் அறிக்கை ஒன்றை தயாரித்து வருகிறது.

அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் சாசனங்களுக்கு அமைவாக ஊழலுக்கு எதிரான சட்டங்கள் வலுவாக்கப்படும், புதிய பொது நிதி முகாமைத்துவ சட்டமூலமொன்று வரைவு செய்யப்படும்.

வெளிநாட்டு கடன்கள் தொடர்பான நிதிக் கொள்கைகள் மற்றும் சட்டங்கள், வரிச் சலுகைகள் மற்றும் வரி விலக்குகள் மற்றும் பெரிய அளவிலான அரசு கொள்முதல் ஒப்பந்தங்களை அனுபவிக்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலைப் பொதுவில் வெளியிட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் நாட்டில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதையும் ஊழலை எதிர்த்துப் போராடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles