Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஏப்ரல் 17 ஆம் திகதி முதல் ஆசிரியர் இடமாற்றங்கள்

ஏப்ரல் 17 ஆம் திகதி முதல் ஆசிரியர் இடமாற்றங்கள்

வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு அமைய நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேசிய பாடசாலைகளிலும் பத்தாண்டு மற்றும் வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் அடுத்த மாதம் 17 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

விசேட மேன்முறையீடுகளுக்கு உட்பட்ட ஆசிரியர்கள் தவிர்ந்த ஏனைய இடமாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

உயர்தர மற்றும் சதாரணதர வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களின் இடமாற்றங்களினால் பிள்ளைகளுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமாயின் அதிபர்கள் ஊடாக மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேன்முறையீடுகளை சிறப்புக் குழு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இதுவரை வழங்கப்பட்ட அனைத்து தற்காலிக பணிகளும் இந்த வருடம் ஜூன் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் இடமாற்றக் கடிதம் கிடைத்தவுடன் அதற்கேற்ப செயற்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles