ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோர் இன்று காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை பேரணிகளை முன்னெடுத்து செல்வதை தடுக்கும் உத்தரவினை கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
அதன்படி ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோர் குறித்த காலப் பகுதியில் கொழும்பின் பல வீதிகளூடாக காலி முகத்திடல், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை மற்றும் நிதி அமைச்சு வளாகங்களை நோக்கி பேரணியாக செல்ல முடியாது.