செய்திகள்உள்நாட்டுஎல்ல வல நீர்வீழ்ச்சியில் மூழ்கி நால்வர் பலி

எல்ல வல நீர்வீழ்ச்சியில் மூழ்கி நால்வர் பலி

வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ல வல நீர்வீழ்ச்சியில் மூழ்கி இளைஞர்கள் நால்வர் இன்று காலை உயிரிழந்துள்ளனர்.

நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற 10 இளைஞர்கள் நீராடிக் கொண்டிருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களை சேர்ந்த 22 முதல் 23 வயதுக்குட்பட்ட நான்கு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அவர்களது சடலங்கள் இன்னும் மீட்கப்படாத நிலையில் வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles