விசேட குழுவொன்றின் பரிந்துரைகளுக்கு அமைய சிறைச்சாலையில் உள்ள விசேட தேவையுடைய கைதிகளுக்கு ஜனாதிபதி, பொது மன்னிப்பு வழங்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறித்த பரிந்துரையின் கீழ் விசேட சுகாதார தேவையுடைய வயோதிபர்கள் மற்றும் கைதிகள் பரிசீலிக்கப்படவுள்ளதாக அமைச்சர் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்கள் தமது தாய் மொழியில், அதாவது தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பரீட்சைக்குத் தோற்றுவது தொடர்பில் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் விஜேதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சட்டக்கல்லூரியின் அபிவிருத்திக்காக தாம் செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.