தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன விபத்தொன்றில் உயிரிழந்தார்.
வீதி விபத்துக்குள்ளான அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான அவர், பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.