Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலிஸாருக்கு எதிராக 1,521 மனுக்கள் தாக்கல்

பொலிஸாருக்கு எதிராக 1,521 மனுக்கள் தாக்கல்

அடிப்படை உரிமை மீறல் தொடர்பாக பல்வேறு தரப்பினரால் பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராக 1,521 அடிப்படை உரிமை மனுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம உயர் நீதிமன்றத்தில் நேற்று (16) அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்த போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜனவரி 20ஆம் திகதி பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு கோரி கொழும்பு பல்கலைக்கழகத்தில் இருந்து நிதி அமைச்சுக்கு நிபுணத்துவம் பெற்ற நிபுணர்கள் மேற்கொண்ட அமைதிப் பேரணியை பொலிஸாரால் பல்வேறு சந்தர்ப்பங்களில் இடையூறு செய்து அவர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles