குற்றக் குழு உறுப்பினர் ‘பூரு மூனா’ என்றழைக்கப்படும் ரவிந்து சங்கவின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு அவிசாவளை மேல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மேல் மாகாண தெற்கு பொலிஸ் பிரிவினால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்திற்கொண்டு இந்த பயணத்தடை நேற்று விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் 18 ஆம் திகதி ஹங்வெல்லவில் உணவக உரிமையாளரை சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட ‘பூரு மூனா’, கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி துபாய்க்கு விமானத்தில் ஏற முயன்றார்.
இதன்போது அவர் கைது செய்யப்பட்டார்.
எனினும், அவர் இரண்டு பௌத்த பிக்குகளின் உதவியுடன் பொலிஸ் பிடியில் இருந்து தப்பிச்சென்றார்.
இந்தநிலையில் ஹங்வெல்ல உணவக உரிமையாளரின் கொலைக்குப் பின்னர், பண்டாரகம, மில்லனிய, மல்வத்த வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தஞ்சமடைந்ததாக, விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டபோது, பூரு மூனா வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனை அடிப்படையாகக்கொண்டு, அவருக்கு உதவியமைக்காக, இலங்கை கடற்படை உறுப்பினர் ஒருவரும் அவரது மனைவியும் ஏனைய நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.