சிலாபம்-முகுணுவடவன பிரதேசத்தில் தனியார் காணியொன்றில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் இன்று (16) கைது செய்யப்பட்டனர்.
இதன்போது, கெப் வண்டியொன்றும் கைப்பற்றப்பட்டதாக சிலாபம் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ராகம பிரதேசத்தைச் சேர்ந்த மூவரும், சிலாபம், ஹெம்மாவதகம மற்றும் பிங்கிரிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.