தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (16) காலை 10.30 மணிக்கு கூடவுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை இதுவரை நிதியமைச்சு விடுவிக்காததை கருத்திற்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வாக்குச் சீட்டு அச்சிடுவதற்குத் தேவையான தொகையை ஒதுக்கித் தருமாறு திறைசேரிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அரசு அச்சக அலுவலகம் கூறுகிறது.