Saturday, January 31, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 14 பேர் கைது

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 14 பேர் கைது

மட்டக்களப்பில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 14 பேர் தொடர்பில் பொலிஸ் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

முல்லைத்தீவைச் சேர்ந்த குறித்த நபர்கள் ஆட்கடத்தல் காரர் ஒருவரினால் மட்டக்களப்பு சுவிஸ்கிராமத்தில் உள்ள வீடொன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் மீட்கப்பட்டிருந்தனர்.

அவர்களில் 3 சிறார்களும், 5 பெண்களும் 6 ஆண்களும் அடங்குவதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles