Sunday, June 22, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் QR முறைமை வீண் செயல்!

எரிபொருள் QR முறைமை வீண் செயல்!

எரிபொருள் பாவனையில் ஜனவரி 2022 மற்றும் ஜனவரி 2023க்கு இடையில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இது கடுமையான பொருளாதார சுருக்கத்தை பிரதிபலிக்கிறது என்று முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் கூறுகிறார்.

இதனால், தேசிய எரிபொருள் அட்டையான QR குறியீடு முறை மூலம் வழங்கப்படும் எரிபொருளை கூட மக்களால் கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இனியும் எரிபொருள் QR முறையை நடைமுறைப்படுத்துவது வீண் என அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த காலகட்டத்தில் டீசல் பயன்பாடு 54%, பெட்ரோல் பயன்பாடு 35% மற்றும் மண்ணெண்ணெய் பயன்பாடு 75% என்றவகையில் குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles