இலங்கையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளுக்கு வழங்குவதற்காக ஜப்பானிய அரசாங்கம் யுனிசெப் நிறுவனத்திற்கு 1.8 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.
இந்த நிதியானது சுமார் 6 இலட்சம் குழந்தைகளுக்கு சுத்தமான குடிநீர், சுகாதார வசதிகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால், பல குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.