இன்று (15) முன்னெடுக்கப்படும் தொழில்சார் போராட்டத்திற்கு ஆதரவளிக்க விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
அவர்கள் இரண்டு மணி நேரம் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இன்று (15) நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை தொழில் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் திசர அமரானந்த தெரிவித்தார்.